இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்துக்கும் இடையே சுமுக உறவு நீடித்து வருகிறது. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு இன்று ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொலி காட்சி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலா முதல் வங்க தேசத்தின் அகவுரா வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு அகர்தலா -அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு ரயில் சேவை (Agartala-Akhaura Cross Border Rail Link Project) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி 5 கிலோமீட்டர் தூரம் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் தூரம் வங்கதேசத்திலும் இருப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் (Nischintapur) சர்வதேச குடியேற்ற மைய ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகர்தலா -அகவுரா ரயில் சேவையுடன் சேர்த்து குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை, மைத்ரி சூப்பர் அனல்மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.