சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயிலை பரங்கிமலை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி வேளச்சேரி - பரங்கிமலை இடையே உள்ள 5 கி.மீ. துாரத்தை இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை அமைக்கும் பணி 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தன. பின்னர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணபட்டு, கடந்த ஆண்டு முதல், 167 தூண்கள் கொண்ட ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து, இந்த தடத்தில் கடந்த ஆண்டு முதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.இப்பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி மேம்பால பாதையை இணைக்கும் வகையில், அங்குள்ள ரயில் பாதைக்கு மேல், இரும்பு தூண்கள் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கி முழு வீச்சில் வேலைகள நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ”இந்த மேம்பால ரயில் பாதை திட்டம் ரூ.734 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்க ஆறு இரும்பு தூண்கள் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முடிவடைந்தது. எஞ்சியுள்ள பணிகளும் அடுத்த ஒரு வாரத்தில் முடியும்” என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.