சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினம் வழியாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் நாள் ஒன்றுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மல்லிப்பட்டினத்தில் வரலாற்று சிறப்புமிக்க மனோரா சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இதை காண நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.
தொற்று நோய் பரவும் அபாயம்
இந்த நிலையில் மல்லிப்பட்டினம் கடைவீதி அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிவருகின்றனர். இதனால் தற்போது அங்கு துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் கழிவுகள் இடையே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. இதேநிலை நீடித்தால் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இந்த குப்பை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.