தீபாவளி பண்டிகையையொட்டி அதிக தள்ளுபடி தருவதாக சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், உஷாராக இருக்கவும் போலீசார்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள்
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை உள்பட பல்வேறு வகையான குறுந்தகவல்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வருகிறது. இதேபோல ஆன்லைனில் பட்டாசு விற்பனை தொடர்பாகவும் காணப்படுகிறது. இதில் மோசடிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் துறை சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் வரும் குறுந்தகவல்களை பிறருக்கு பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். இது போன்று வரும் குறுந்தகவல்களில் உள்ள லிங்குகளில் உள்ள விவரங்களை பார்க்கும் போது செல்போனில் உள்ள விவரங்களை மர்மநபர்கள் நூதனமுறையில் ஹேக் செய்து மோசடியில் ஈடுபட முடியும் எனவும், குறுந்தகவலில் உள்ள நிறுவனங்கள் போலியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் சைபர்கிரைம் மோசடி தொடர்பாக 1930 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனவும், www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.