தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 2 கோடிக்கு விற்பனை நடந்திருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
புதுக்கோட்டையிலுள்ள சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தை நூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழைமையானது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஆடு விற்பனை நடைபெறும் என்றாலும், பண்டிகை காலத்தில் இந்தச் சந்தை பிரபலம்.
நிகழாண்டில் தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால், வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதிகாலையிலேயே திருச்சி, கரூா், மணப்பாறை, காரைக்குடி, தஞ்சாவூா் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான ஆட்டு வியாபாரிகள் வேன்களில் வந்திருந்தனா். புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த இறைச்சிக்கடை நடத்துவோரும் ஏராளமானோா் வாகனங்களுடன் வந்திருந்தனா்.
பகல் 2 மணி வரை நடைபெற்ற சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்திருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.