பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை கடன் வாங்காதீர்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
குழந்தைகள் தின விழா
சென்னை கோட்டூர்புரத்தில் குழந்தைகள் தின விழா நடந்தது. இந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 114 பள்ளிகளுக்கு கேடயங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 180 மாணவ-மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கடன் வாங்காதீர்கள்
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விளையாட்டுத்துறையிலும் சிறந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த 114 பள்ளிகளில் இருந்து விளையாட்டு வீரர்களும் கிடைக்க இருக்கிறார்கள். அதன் மூலமும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உடற்கல்வி பாடவேளைகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள். மாணவ-மாணவிகள் விளையாடுவதற்கு வாய்ப்பை கொடுங்கள். முடிந்தால், கணிதம், அறிவியல் பாடவேளைகளை உடற்கல்வி வகுப்புக்கு கடன் கொடுங்கள். கல்வி என்பது வெறும் பாடப்புத்தகத்தை மட்டும் படிப்பது அல்ல. புத்தகத்துக்கு வெளியிலும் கற்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது. அதற்கு உதாரணமாகதான் இப்போது பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றிருக்கிறீர்கள். உங்கள் திறமைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
தி.மு.க. அரசு துணை நிற்கும்
சமீபத்தில் வெற்றிகரமாக சென்ற சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். அவர்களை முதல்-அமைச்சர் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதுபோல அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த சாதனையாளர்களாக வரவேண்டும். அதற்கு தி.மு.க. அரசும், முதல்-அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறையும் என்றென்றும் துணைநிற்கும்.
அமைச்சர் மீது பொறாமை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பார்க்கும்போது எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது.. அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறை என்பதால், கோவில், கோவிலாக சுற்றுகிறார். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதால், ஸ்டேடியம் போன்ற இடங்களுக்கு செல்கிறேன். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒவ்வொரு மாதமும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார் (சிரித்தபடி). 3 மாதங்களுக்கு முன்பு துபாய், 2 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர், மலேசியா நேற்று ஜப்பானில் இருந்து வந்துள்ளார். அடுத்து எங்க போகப்போறாருனு தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.