ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது மனைவி சிந்துவை பிரசவத்திற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அங்கிருந்த செவிலியர் அமுதா சரவணனிடம் பிரசவம் பார்த்ததற்காக லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடிேயா சமூக வலைத்தளத்தில் பரவியது. இதுகுறித்து சரவணன் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்தநிலையில், அறந்தாங்கி குடும்பநலத்துறை துணை இயக்குனர் கோமதி இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். இதையடுத்து நேற்று புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஸ்ரீபிரியா தேன்மொழி, செவிலியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.