பாம்பன் கடலில் 8 கிலோ தங்கம் நேற்று சிக்கியது. தனியாக மிதந்த மிதவையில் இருந்து மட்டும் 4½ கிலோ தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன. கடலில் நீந்தி தப்பிய கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
படகில் வந்த பார்சல்
இலங்கையில் இருந்து அவ்வப்போது கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடல் வழியாக தமிழகத்திற்கு கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் இலங்கைக்கு கடல் அட்டை, பீடிஇலை, கஞ்சா, மஞ்சள், ஹெராயின் உள்ளிட்டவை கடத்தப்படுவதும் நடக்கின்றன.
இந்தநிலையில் மற்றொரு சம்பவமாக இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் படகில் தங்கக்கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய சுங்கத்துறையின் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாம்பன் முந்தல்முனை கடற்கரை பகுதிக்கு சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ரவி அற்புதராஜ் தலைமையில் 13 அதிகாரிகள் குழுவினர் விரைந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
நேற்று அதிகாலையில் நாட்டுப் படகு ஒன்று முந்தல்முனை கடற்கரை நோக்கி வந்தது. அந்த படகு கரை அருகே வந்தபோது, கரையில் அதிகாரிகள் நிற்பதை படகில் வந்்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவசர அவசரமாக படகில் இருந்த ஒரு பார்சலை எடுத்து கடலில் வீசினர்.
8 கிலோ தங்கம்
பின்னர் அவர்கள், கடலில் குதித்து நீந்தி வேறொரு இடத்தில் கரை சேர்ந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சுங்கத்துறையினர் கடலுக்குள் இறங்கி, கடத்தல்காரர்கள் வீசிய பார்சலை சற்று நேரத்தில் மீட்டுவிட்டனர். அந்த பார்சலை ராமேசுவரம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து பிரித்து பார்த்தனர். அதில் 25 தங்கக்கட்டிகள் இருந்தன. மொத்தம் 3½ கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
படகில் இருந்து மேலும் பார்சலை கடலில் வீசியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அதனால் மீண்டும் கடலுக்கு சென்று பாம்பன் முந்தல்முனைக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட தென்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மன்னார் வளைகுடா நடுக்கடல் பகுதியில் கயிறு கட்டி தொங்கவிட்டபடி மிதவை ஒன்று தன்னந்தனியாக கடலில் மிதந்தது. அதனை அதிகாரிகள் எடுத்து பார்த்தபோது, அதனுடன் பார்சல் இணைக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததால், அதை மேலே தூக்கினர்.. அதிலும் 4½ கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன.
ஆக மொத்தம், ஒரே நாளில் பாம்பன் கடலில் இருந்து 8 கிலோ தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்கள் யார்?
படகில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்து தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் யார்? அந்த படகு யாருக்கு சொந்தமானது? என அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து, கடத்தல்காரர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
படகில் கடத்தி வரப்பட்டு பிடிபட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.