கோட்டைப்பட்டினத்தில் ஆதார் சேவை மையம் அமைக்க கோரிக்கை




கோட்டைப்பட்டினம் ஊராட்சி புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சியாகும். இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என்றால் அருகே உள்ள மணல்மேல்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் விடுமுறை எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டைப்பட்டினத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments