திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் 12.12.2023 OMS சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் 12.12.2023 OMS சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

ரயில் பாதையில் அடிக்கடி உறுதித்தன்மை  தண்டவாள அதிர்வுகளை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில்  வரும் டிசம்பர் 12 ஆம் தேதி
 
* திருவாரூர் - காரைக்குடி
* திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி
* மயிலாடுதுறை - திருவாரூர் 
* நீடாமங்கலம் - மன்னார்குடி

ஆகிய வழித்தடங்களை 110 கிலோ மீட்டர் அதிவேக தடமாக மாற்றுவதற்காக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது..

எனவே ரயில் வழித்தடத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதைகளை கடப்பதையோ, ரயில்பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ இருசக்கர வாகனங்களை கடவுபாதையில் நுழைத்து கடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ரயில் பாதை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதைகளை கடப்பது, ரயில்பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது, மூடி இருக்கும் ரயில்வே கேட் வழியாக  நடந்து செல்வது, இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, வேகமாக செல்லும் ரயில் அருகில் சென்று செல்போன் மூலம் போட்டோ ,வீடியோ, செல்ஃபி எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் ரயில் பாதை அருகில் செல்லாமல்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டிசம்பர் 23 க்குள் மேற்குறிப்பிட்ட வழித்தடங்களை 110 கிலோ மீட்டர் வேகத்தில் இரயில்களை இயக்குவதற்கான அதிவேக தடமாக மாற்றப்படும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments