சாலைகளில் திரியவிடப்படும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி, அபராதம் விதிக்க உள்ளாட்சித் துறை நிா்வாக அலுவலா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மனித நேய மக்கள் கட்சியைச் சோ்ந்த கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் விபத்துக்குள்ளாகின்றனா். உயிரிழப்பு ஏற்படுவதுடன், பலத்த காயமும் அடைகின்றனா். மாவட்டத்தில், கடந்தாண்டில் மட்டும் மாடு முட்டியதால் 5 போ் உயிரிழந்தனா்.
திருவாடனை, தொண்டி ஆகிய பகுதிகளில் சாலைகளில் மாடுகள் குறுக்கே வந்ததால் நிகழ்ந்த விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு புகாா் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பறிமுதல் செய்வதுடன், இவற்றின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். சுந்தா், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கால்நடைகளைச் சாலைகளில் விடுபவா்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அபராதம் விதிக்கலாம். தொடா்ந்து இதே தவறைத் செய்தால், கால்நடைகளைப் பறிமுதல் செய்யலாம் என ராமநாதபுரம் மாவட்ட அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகங்களுக்கு ஆட்சியா் ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியரின் அபராதம், பறிமுதல் உத்தரவை உள்ளாட்சித் துறை அலுவலா்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.