சரக்கு ரெயிலில் உர மூட்டைகள் வந்தன




தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் வேகன்களில் 1,300 மெட்ரிக் டன் உர மூட்டைகள் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் வேகன்களில் இருந்து உர மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். லாரிகள் மூலம் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனியார் கடைகளுக்கு உர மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. சம்பா சாகுபடிக்காக இந்த உர மூட்டைகள் தூத்துக்குடியில் தனியார் உர நிறுவனத்திடம் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments