பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர், தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர்-காரைக்குடி மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மாற்றம் செய்வதற்காக இந்த தடத்தில் சென்று வந்த அனைத்து ரெயில்களும் 2007-ம் ஆண்டு நிறுத்தப்பட்டன. 2019-ம் ஆண்டு பணிகள் முடிவடைந்து அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்று 2021-ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருவாரூர் மார்க்கம் மற்றும் காரைக்குடி மார்க்கம் செல்லும் ரெயில்களின் நடைமேடை ஒன்றில் என்ஜினுக்கு அடுத்துள்ள 6 பெட்டி அளவிற்கு பயணிகள் பிளாட்பாரத்தில் அமர்வதற்கு இருக்கைகள் ஏதும் இல்லாமல் நடைமேடையிலேயே அமர்ந்து இருக்கும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பிளாட்பாரத்தில் போதிய இருக்கைகள் அமைத்து தர வேண்டும். மழைநீர் ஒழுகாதபடி செட்டர் பகுதியை பழுது பார்க்க வேண்டும். திங்கட்கிழமை விரைவு ரெயில்களில் செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தட்கல் முறையில் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் முன்பதிவு கவுண்டர் திறக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.