ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு கூட்டம்






ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சென்னையில் ‘மிக்ஜம்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது பயணப்படியான ரூ.18,700-ஐ ஒன்றியக்குழு தலைவரிடம் வழங்கினார்கள். இதையடுத்து பாண்டிபத்திரம், பூங்குடி கிராமங்களில் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும். ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலை துறையின் ஆர்.ஆர். திட்டத்தில் சாலை பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments