கறம்பக்குடி தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் சபரிமலை பக்தர்கள் மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 24-ம் ஆண்டு ரத ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக சென்ற ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்ப சுவாமிக்கு ஆங்காங்கே பொதுமக்கள் அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்பு கொடுத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்த ஊர்வலம் தானிய கடை முக்கம் பகுதியில் சென்ற போது அங்கு முஸ்லிம்கள் திரண்டு நின்று அய்யப்பன் ரத ஊர்வலத்தை வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் பஜனை பாடி சென்ற அய்யப்ப பக்தர்களுக்கு குளிர்பானம், பிஸ்கெட் வழங்கி உபசரித்தனர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது அரசியல் சாசனத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற மதம் கடந்த இந்த மனித நேய செயலை பார்த்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.