அய்யப்பன் ரத ஊர்வலத்தை வரவேற்ற முஸ்லிம்கள் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கி உபசரிப்பு




கறம்பக்குடி தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் சபரிமலை பக்தர்கள் மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 24-ம் ஆண்டு ரத ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக சென்ற ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்ப சுவாமிக்கு ஆங்காங்கே பொதுமக்கள் அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்பு கொடுத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்த ஊர்வலம் தானிய கடை முக்கம் பகுதியில் சென்ற போது அங்கு முஸ்லிம்கள் திரண்டு நின்று அய்யப்பன் ரத ஊர்வலத்தை வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் பஜனை பாடி சென்ற அய்யப்ப பக்தர்களுக்கு குளிர்பானம், பிஸ்கெட் வழங்கி உபசரித்தனர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது அரசியல் சாசனத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற மதம் கடந்த இந்த மனித நேய செயலை பார்த்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments