அறந்தாங்கியில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் கைது




அறந்தாங்கியில் அரிசி கடையில் மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அறந்தாங்கி அருகே மூக்குடியை சேர்ந்த சாத்தையா மகன் சக்தி(31). இவர் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள செக்போஸ்டு பஸ் நிறுத்தம் அருகே அரிசி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அறந்தாங்கி கோட்டை 2ம் வீதியை சேர்ந்த விக்ரம்(22) சென்று ரூபாய் 5 ஆயிரத்து 500 ரூபாயை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து விக்ரமை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments