அறந்தாங்கியில் அரிசி கடையில் மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அறந்தாங்கி அருகே மூக்குடியை சேர்ந்த சாத்தையா மகன் சக்தி(31). இவர் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள செக்போஸ்டு பஸ் நிறுத்தம் அருகே அரிசி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அறந்தாங்கி கோட்டை 2ம் வீதியை சேர்ந்த விக்ரம்(22) சென்று ரூபாய் 5 ஆயிரத்து 500 ரூபாயை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து விக்ரமை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.