திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.527 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மூத்த ரெயில்வே அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு வகையான பொருட்களை சரக்கு ரெயில்களில் ஏற்றி அனுப்பும் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ரூ.527 கோடி வருவாய்
திருச்சி கோட்ட மூத்த வணிக மேலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று, சரக்கு போக்குவரத்து மூலம் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் வளர்ச்சி மற்றும் வருவாய் உள்ளிட்ட விவரங்களை ஒளித்திரை காட்சி மூலம் விளக்கி கூறினார். மேலும், திருச்சி ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில்களில் நிலக்கரி, சிமெண்டு, உணவு தானியங்கள், உரம், இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 9.212 மில்லியன் டன் அளவுக்கு கையாளப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ரூ.527 கோடியே 13 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு
இதனை தொடர்ந்து கோட்ட மேலாளர் அன்பழகன் பேசும்போது, திருச்சி ரெயில்வே கோட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க முனைப்பு காட்டி வருகிறது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலங்களில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிகப்படியான சரக்குகளை கையாள்வதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.