ஜெகதாப்பட்டினம் : சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு




தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலை கள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப் படகு மீன்பிடித்துறை முகத்திலிருந்து 12-ந் தேதி புதன்கிழமை 79 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சின்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (25), குமார் ஆகியோரை சிறைபிடித்து சென்றனர். மேலும் சிறை பிடிக்க ப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments