பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 2-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விளையாட்டு போட்டிகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப்போட்டிகள் புதுக்கோட்டையில் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா தலைமை தாங்கி கூறியதாவது:-
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கால்பந்து, ஆக்கி, கைப்பந்து, டென்னிஸ், இறகு பந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. 38 மாவட்டங்களை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்குமான உணவு, தங்குமிடம், குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்து புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜூ, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி உள்பட போட்டி நடைபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.