கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது 

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என ஏற்கெனவே சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வழக்கமாக ஆண்டு தோறும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு ஜனவரி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.  


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 16.12.2023  சனிக்கிழமை காலை முதல் மணி   தீடீரென கருமேகங்கள் சூழ்ந்து  வெப்பம் தணிந்து  மிதமான மழை பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது. 

சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது.

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில் க்ஷ குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments