ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. மின்கம்பமும் சாய்ந்தது.
ஆரஞ்சு அலர்ட்
ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. தொடர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் திருவாடானை தொண்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி சன்னதி மேற்கூரையில் தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் கூரை கொட்டகை சேதமடைந்தது.
ஓட்டு வீடு சேதம்
இதேபோல் தேளூர் பெரிய குடியிருப்பு அருகில் திடீரென மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மின் துறை அலுவலர்கள் மூலம் மின்தடை செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வேறு ஏதும் சேதங்கள் ஏற்படவில்லை. இதேபோல் அ.மணக்குடி கிராமத்தை சேர்ந்த அஜித் (வயது 25) என்பவருக்கு சொந்தமான மண் சுவரில் கட்டப்பட்ட ஓட்டு வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.