கோபாலப்பட்டிணம் - மீமிசல் இணைக்கும் காவல் நிலையம் - காட்டுக்குளம் சாலை பணிகள் ஆரம்பம்




கோபாலப்பட்டிணம் - மீமிசல் இணைக்கும் காவல் நிலையம் -  காட்டுக்குளம் - பழைய காலணி- தோப்பு சாலை பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மீமிசல்-கோபாலப்பட்டிணத்தை இணைக்கும் முக்கிய சாலையாக காவல் நிலையம் செல்லும் சாலை மற்றும் ஸ்டேட் பேங்க் சாலை இருந்து வருகிறது.


இந்நிலையில் இந்த சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்து வந்த நிலையில் கடந்த 06.07.2023 அன்று முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்ச மதிப்பீட்டில் இரண்டு சாலைகளும் புதிதாக தார் சாலை அமைப்பதற்காக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு சுமார் 5 மாதங்கள் எந்த வேலைகளும் நடைபெறாமல் இருந்து வந்தது.
 
இந்நிலையில் நேற்று  19.12.2023 செவ்வாய்க்கிழமை கோபாலப்பட்டிணம் - மீமிசல் இணைக்கும் காவல் நிலையம் -  காட்டுக்குளம் சாலை பணிகள் JCB மூலமாக அகலப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஜெல்லி கற்கள்  குவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தார் அமைத்து புதிய சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது 











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments