அறந்தாங்கி பகுதிகளில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி.8.01.2024. அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு மக்களிடம் கையெழுத்து இயக்கம் மற்றும் துண்டு பிரசுரங்களை அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வழங்கல்




அறந்தாங்கி   பகுதிகளில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி.8.01.2024. அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு  மக்களிடம் கையெழுத்து  இயக்கம் மற்றும் துண்டு பிரசுரங்களை  அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வழங்கினர் .

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி.8.01.2024.
அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு  மக்களிடம் கையெழுத்து  இயக்கம் மற்றும் துண்டு பிரச்சுரங்களை  அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வழங்கினர் 

இதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது அதில் 


1. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத 12 மணி நேர வேலை வழங்குவதை நிறுத்தி 8 மணி நேர வேலையை வழங்கவேண்டும்.

2. சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்

 3.தமிழக முழுவதும் ஆம்புலன்ஸ்களை 24×7 என முழுமையாக தங்கு தடையின்றி இயக்க வேண்டும் அதற்குத் தேவையான தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த வேண்டும் . அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் அரசுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸை வழங்க வேண்டும் ,பெண் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் கழிவறையுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்து தரவேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களுக்கு துண்டு பிரசுரத்தின் மூலம்   தெரியப்படுதினர்

இந்த நிகழ்ச்சியில் 

108 தொழிலாளர் COITU மாநில செயலாளர்  பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது


இதில் மாவட்ட செயலாளர் வீரமுத்து   மாநில காரிய கமிட்டி உறுப்பினர் அழகர் ரெனிரூபன் , ஹென்றி டேனியல், ஐஸ்வர்யா , சாக்ரடீஸ்,பிரகாஷ் பலர் கலந்து கொண்டனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments