இந்தியா கூட்டணியின் எம்பிக்களை இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம்






நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய இந்தியா கூட்டணியின் எம்பிக்களை இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை காந்திப் பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா்.

முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலா் பெனட் அந்தோனிராஜ், செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, நகரத் தலைவா்கள் மதன் கண்ணன், பாருக் ஜெய்லானி,புதுக்கோட்டை வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments