மணமேல்குடி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில், தற்போது சாகுபடி செய்யப்பட்டு வரும் சம்பா நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இலைசுருட்டு புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. அனைத்து பணியாளர்களும் வயல்வெளி கள ஆய்வு செய்து மேலாண்மை முறைகளை எடுத்துக்கூறி வருகிறார்கள். எனவே விவசாயிகள் அதிகமாக பாதிப்பு ஏற்படுவதற்குள் மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும். வேளாண்மை கிடங்கில் உள்ள நுண்சத்து உயிர் உரங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினார். கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் கந்தகிரிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.