புதுக்கோட்டையில் மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்து முகாம்!






பட்டியலியன மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்து முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டையில் நாளை 01.01.2024 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கத்தில் பட்டியலியன மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தமிழகத்தின் தலைசிறந்த தோல்நோய் மற்றும் லேசர் மருத்துவர்களில் ஒருவரான "மக்கள் மருத்துவர்” Dr.ச.தெட்சிணாமூர்த்திMBBS.,DDVL., சிகிச்சை அளிக்க உள்ளார்.

இந்த முகாமில் சிகிச்சையளிக்கும் நோய்கள்:
முகப்பருக்கள், முடி உதிர்தல், பொடுகு, நாள்பட்ட படை, அரிப்பு, சிரங்கு, மருக்கள் நீக்கம், ஒவ்வாமை, சிவப்பு பட்டைகள், கன்னம், மூக்கில் ஏற்படும், கருமை நீக்கம், முகப்பரு தழும்புகள், சோரியாசிஸ், முகம் பொலிவாக, வெண் புள்ளிகள், குழந்தைகளுக்கான அனைத்து தோல் நோய்கள், பால்வினை நோய்கள்.

இந்த மருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இவண்
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
அறந்தாங்கி. புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 94104 98428


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments