புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்




வங்ககடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் கடந்த சனிக்கிழமை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments