பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற சிறப்பு திட்டம் மூலம் 08-01-2024 முதல் 10-01-2024 வரை .தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் , முன்னாள் மாணவர்களைக் கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டமானது சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை நமது அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ST.இராமச்சந்திரன் அவர்கள் துவக்கிவைத்தார்கள்.
மேலும் 2021-2022 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு வகுப்பறை கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
மேல்நிலையில் பயிலும் ஒரு மாணவரையும் ஒரு மாணவியையும திறப்புவிழாவிற்கான நாடாவை(ரிப்பன்) வெட்ட வைத்து வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் மதிப்புமிகு தாமரைச்செல்வன், உதவிதலைமை ஆசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமார் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்கள், பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, கூடலூர் முத்து, பாண்டியன், சிவ கிருபாகரன் ராஜமாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.