தொண்டியில், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை




தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தங்களது ஒரு மாத மதிப்பூதியம் ரூ.45,500-ஐ தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையொட்டி முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதற்கான காசோலையை கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் வழங்கினார்.

அப்போது அவர் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறிவிப்பின் பேரில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைத்திட தொண்டி பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தொண்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் களஆய்வு செய்து உள்ளார். தொண்டி பேரூராட்சியில் உள்ள மாணவர்கள், மாணவிகளின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், தங்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கு முறையான உடற்பயிற்சி ஆய்வுக்கூடம் இல்லாதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தொண்டி பேரூராட்சியில் அனைத்து உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி ஆய்வுக்கூடம் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments