கூரியரில் கஞ்சா கடத்திய 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை




ஹைதராபாத்தில் இருந்து கூரியா் மூலம் கஞ்சா கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஹைதராபாத்தில் இருந்து கூரியா் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக மதுரையிலுள்ள போதைப்பொருள்கள் தடுப்பு சுங்க போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சியிலுள்ள கூரியா் நிறுவனத்தில் கடந்த 2021 மாா்ச் மாதம் விசாரணை நடத்தினா்.

அப்போது, 201 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த மாயபாண்டி (33), பாண்டி (38), திருச்சியைச் சோ்ந்த சசிகுமாா் (35) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டையிலுள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி பாபுலால் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

அந்தத் தீா்ப்பில், மாயபாண்டி, பாண்டி, சசிகுமாா் ஆகிய மூவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1.40 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments