சிவில் விவகாரங்களில் தலையிடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருண் தமிழக போலீசாருக்கு பொதுவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தலையிடக்கூடாது
பணம், சொத்து, பாதை தகராறு போன்ற சிவில் பிரச்சினை தொடர்பான மனுக்கள் மீது காவல்துறை அதிகாரிகள் சிலர் முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் விவகாரங்கள் தவிர மற்ற பொதுவான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிடக்கூடாது, என்று அறிவுறுத்தப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதப்படும் விவகாரங்களில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
கடும் நடவடிக்கை
இதை மீறி பொதுவான சிவில் விவகாரங்களில் தலையிடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு சுற்றறிக்கையில், கூடுதல் டி.ஜி.பி. அருண் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.