கட்ட அனுமதிக்கு லஞ்சம்: ஊராட்சித் தலைவா், ஒப்பந்ததாரா் கைது




தென்காசி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அவ்வூராட்சித் தலைவா் உள்பட 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கேரள மாநிலம் கொல்லத்தை சோ்ந்தவா் ரெஜினிஸ் பாபு(44).இவரது உறவினா் வந்தனா அமெரிக்காவில் வசித்து வருகிறாா். இவருக்காக குத்துக்கல்வலசை ராஜாநகா் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி கோரி, ஊராட்சி அலுவலகத்தில் ரெஜிஸ்பாபு விண்ணப்பித்துள்ளாா்.

அவரிடம், வரைபட அனுமதிக்கான அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.59,290 மற்றும் லஞ்சமாக ரூ.46 ஆயிரம் (2 சதவீதம்) வேண்டும் ஊராட்சித் தலைவா் சத்தியராஜ் கேட்டாராம்.

இதுகுறித்து, தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் ரெஜனிஸ் பாபு புகாா் செய்தாா். போலீஸாா் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ. 40 ஆயிரத்துக்கான நோட்டுகளை, ஊராட்சித் தலைவரிடம் அவா் கொடுத்துள்ளாா்.

அந்தப் பணத்தை அங்கிருந்த ஒப்பந்ததாரா் செளந்தராஜனிடம் கொடுக்குமாறு ஊராட்சித் தலைவர கூறினாராம். அப்போது, அங்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி அடங்கிய குழுவினா் ஊராட்சித் தலைவரையும், ஒப்பந்ததாரா் செளந்தரராஜனையும் கைது செய்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments