கஞ்சா கடத்திய டிரைவருக்கு 11 ஆண்டுகள் சிறை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு




கஞ்சா கடத்திய டிரைவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கஞ்சா கடத்தல்

ராமநாதபுரம் பகுதியில் போதை பொருள் கடத்தல் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் காரில் மூட்டை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டையை பிரித்து பார்த்ததில் அதில் 160 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த ராமநாதபுரம் தேவிபட்டிணத்தை சேர்ந்த டிரைவர் நயினார்சித்திக் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

11 ஆண்டுகள் சிறை

இதையடுத்து போலீசார் புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக நயினார் சித்திக்கிற்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும். ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் வாதாடினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments