பண்டிகை காலங்கள் என்றாலே காவல்துறை அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனால் அவர்களால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது தங்களுடைய குடும்பங்களுடன் இணைந்து அவற்றைக் கொண்டாடுவது என்பது பெரும்பாலும் காவலர்களுக்கு முடியாததாக இருக்கும்.
இதனிடையே, துறை சார்ந்த அலுவலகங்களில் பொங்கல் பண்டிகைகளுக்கு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாடிய நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது, மீமிசல் காவல் நிலயத்தில் பணி புரியும் அனைத்து காவலர்கள், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் என அவனைவரும் காவல் நிலையம் முன்பாக (ஜன.15) பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல் நிலையத்தை வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் காவல் நிலையத்திற்கு இடம் வழங்கிய காரியதரிசி குடும்பத்தார்களுக்கு காவல் துறையினர் சார்பில் கெளரவிக்கப்பட்டது
நிகழ்ச்சியில் காரியதரிசி குடும்பத்தை சேர்ந்த S. அயூப் கான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்கள்.
தகவல்:
பாதுஷா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.