பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது
தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தார். அப்போது கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த சங்கீதா(வயது 43) என்பவர் தனிப்பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் தனக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என சந்திரபாபுவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சந்திரபாபு இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுக்களை சந்திரபாபுவிடம் கொடுத்து அதை சங்கீதாவிடம் வழங்குமாறு தெரிவித்தனர். அதன்படி சங்கீதாவிடம் ரூ.3 ஆயிரத்தை சந்திரபாபு கொடுத்தார். அதை சங்கீதா வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும், களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.
3 ஆண்டுகள் சிறை
பின்னர் அவரை கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சண்முகப்பிரியா விசாரணை செய்து சங்கீதாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முகமது இஸ்மாயில் ஆஜராகி வாதாடினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.