இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நில சீர்திருத்த ஆணையர் பங்கேற்பு





இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நில சீர்திருத்த ஆணையர் பங்கேற்றார்.

ஆய்வுக்கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.1.2024-ம் தேதியினை தகுதியான நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து 2024-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நில சீர்திருத்த ஆணையரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான வெங்கடாசலம் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

செயல்முறை விளக்கம்

கூட்டத்தில் முன்னிலை வகித்த கலெக்டர் மெர்சி ரம்யா, சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியில் படிவம் 6-ல் 31,364 படிவங்களும், படிவம் 7-ல் 10,557 படிவங்களும், படிவம் 8-ல் 8,797 படிவங்களும் ஏற்கப்பட்டுள்ளது என்றார். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையத்தை நில சீர்திருத்த ஆணையர் பார்வையிட்டார்.

கூட்டத்தில் ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), நகராட்சி ஆணையர் ஷியாமளா, தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments