புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருந்து இல்லாததாலும், சிகிச்சைக்கு காலதாமதம் ஏற்பட்டதாலும், பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த அப்சர் என்ற சிறுவன் கடந்த வாரம் இறந்தான். இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினரும், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் நியமித்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, விஷமுறிவு சிகிச்சை உயிர்காக்கும் அவசர சிகிச்சை இல்லாதது உள்பட மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.