கோட்டைப்பட்டினம் அருகே பாய்மர படகு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




கோட்டைப்பட்டினம் அருகே பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பாய்மர படகு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கு மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. போட்டியை மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்து வெற்றி பெற்ற முதல் 3 படகு உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பரிசு

முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாலை ஊரை சேர்ந்த படகிற்கும், 2-வது பரிசான ரூ.40 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி ஊரை சேர்ந்த படகிற்கும், 3-ம் பரிசான ரூ.30 ஆயிரத்தை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடி ஊரை சேர்ந்த படகிற்கும் வழங்கப்பட்டது. இந்த படகு போட்டியை அப்பகுதியை சேர்ந்த திரளானவர்கள் கண்டு ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments