தெலுங்கானாவில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 3,640 டன் அரிசி மூட்டைகள் வந்தன




தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் இருந்து சரக்கு ரெயிலில் புதுக்கோட்டைக்கு நேற்று அரிசி மூட்டைகள் வந்தன. இதில் 58 வேகன்களில் மொத்தம் 3 ஆயிரத்து 640 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் வந்தன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் வேகன்களில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். பின்னர் லாரிகள் மூலம் அரிசி மூட்டைகள் திருவப்பூரில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. அங்கிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments