மன்னார்குடியில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் அரசு விரைவு பேருந்து புகுந்ததில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்த பேருந்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மன்னார்குடி தேரடி பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு காலை நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து பின்னர் தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு பஸ்களில் செல்வது வழக்கம். இதனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் காலை நேரத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற ஒரு அரசு விரைவு பேருந்து, மன்னார்குடி பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அந்த பேருந்தை சென்னையை சேர்ந்த மாரியப்பன்(வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது.
2 பெண்கள் பலி
இந்த விபத்தில் மன்னார்குடியை அடுத்த கீரக்களூரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சீதாலட்சுமி(50), கூப்பாச்சிக்கோட்டை ஏரிக்கரையை சேர்ந்த சசி பிரபாகரன் மனைவி இந்திரா(30), மேல மருதூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மனைவி ராணி(41), களப்பாலை அடுத்த கரம்பக்குடியை சேர்ந்த பிச்சைக்கண்ணு மனைவி அன்பு மலர்(50) ஆகிய 4 பெண் தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சீதாலட்சுமி, இந்திரா ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் படுகாயம்
படுகாயம் அடைந்த மேலும் 2 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் பேருந்து புகுந்த விபத்தில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.