அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து புண்ணிய தலங்களான திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, தாமரைக்குளம், புதுமடம், பிரப்பன்வலசை வழியாக புதிய வழித்தடத்தில் ராமேசுவரத்திற்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல ராமேசுவரத்தில் இருந்து மேற்கண்ட ஊர்கள் வழியாக ராமநாதபுரத்திற்கு பஸ் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ் தினமும் 4 முறை இயக்கப்பட உள்ளது. இந்த புதிய பஸ் சேவையை ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அந்த பஸ்சில் அமைச்சர், கலெக்டர் விஷ்ணு சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோர் டிக்கெட் வாங்கி சிறிது தூரம் பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக பொது மேலாளர் சிங்காரவேலன், கோட்ட மேலாளர் பத்மகுமார், ராமநாதபுரம் நகர்மன்ற துணை தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவிதாயினி, கவிதா கதிரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.