பல்லவன் எக்ஸ்பிரஸ்
காரைக்குடி-சென்னை இடையே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலையில் புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்வதற்கும், மாலை நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு இரவில் புதுக்கோட்டை வருவதற்கும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டாலும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு எடுத்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்கள், தொடக்க நாட்களில் பயணிகள் இந்த ரெயிலை அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
பயன்பாடு அதிகரிப்பு
இதுகுறித்து பயணிகள் வட்டாரத்தில் கூறுகையில், "பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது. அதன்பின் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் இருந்தும், மறு மார்க்கத்தில் இருந்து புதுக்கோட்டைக்கும் முன்பதிவு எடுத்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 350-ஐ தாண்டியுள்ளது. முன்பு 100 முதல் 150 வரை இருந்தது.
தற்போது அதிகரித்தது முன்பதிவு இருக்கைகளின் விவரத்தில் தெரியவருகிறது. இந்த பயன்பாடு அதிகரிப்பின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்ததாக கீரனூர், திருமயம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் இந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக முன்வைக்க முடியும். பல்லவன் அதிவிரைவு வண்டி என்பதால் இந்த ரெயில் நிலையங்களுக்கு நிறுத்தம் கிடைக்குமா? என்பதை சொல்ல முடியாது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் வலியுறுத்தினால் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.