கட்டுமாவடி அருகே விபத்து... அரசு பேருந்தும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து




 கட்டுமாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில்  விபத்து... அரசு பேருந்தும் பால் வண்டி   மோதிக்கொண்டு.. கட்டுப்பாடுகளை இழந்து.. விபத்துக்குள்ளானது

 (07-02-2024) மதியம் 3 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற பேருந்து கட்டுமாடியை அடுத்து சென்றுக் கொண்டிருக்கையில் எதிரை வந்த பால் வண்டியில் ஒன்று நேராக வர பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது 

இதில் சிறு சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர் காயம் பட்டவர்களை பக்கத்தில் இருக்கக்கூடிய மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களத்தில் அரசு ஆம்புலன்ஸ், R. புதுப்பட்டினம் & மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ்  இருந்தனர்.

விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் 

இது குறித்து சேதுபாவசத்திரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments