புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் புதுப்பொலிவுடன் நீச்சல் குளம்




புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் புனரமைப்பு பணியின் காரணமாக நீச்சல் குளம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

விளையாட்டரங்கம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுவதற்கான வசதிகள் உள்ளது. இதேபோல குத்துச்சண்டை, பளு தூக்குதல் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் பயிற்சி வசதிகளும் தனியாக உள்ளது. மேலும் நீச்சல் குளமும் உள்ளது. இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் பயிற்சி கட்டணம் செலுத்தி பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி தவிர பெரியவர்களும் குளிப்பது உண்டு.

சுத்தப்படுத்தும் கருவி

இந்த நிலையில் நீச்சல் குளத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதையடுத்து புனரமைப்பு பணிக்காக குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நீச்சல் குளத்தில் கரைப்பகுதியில் வீரர், வீராங்கனைகள் நிற்கும் வசதியிலும், கைப்பிடிகள், டைல்ஸ்கள், உடைமாற்றும் அறையில் டைல்ஸ்கள், குழாய்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டன.

நீச்சல் குளத்தின் வளாக பகுதி முழுவதும் புதிதாக வர்ணம் பூசப்பட்டது. தற்போது புனரமைப்பு பணிகளால் நீச்சல் குளம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. மேலும் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்வதற்கான நவீன மோட்டார் கருவியும் பொருத்தப்படுகிறது. கோடை கால விடுமுறையில் நீச்சல் பயிற்சிக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments