பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பால பணிகளை இந்திய ரெயில்வே வாரிய தலைவர் ஜெயவர்மா சின்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரெயில்வே வாரிய தலைவர்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில்வே பாலம் கட்டும் பணியானது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த பாலத்தையும், பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இந்திய ெரயில்வே வாரிய தலைவர் ஜெயவர்மா சின்கா நேற்று மதுரை வந்தார். இங்கிருந்து சிறப்பு ரெயில் மூலமாக மண்டபம் ரெயில்வே நிலையம் சென்று இறங்கினார். அங்கிருந்து கார் மூலமாக பாம்பன் சென்றார். அவருடன் ரெயில்வேத்துறை உயர் அதிகாரிகளும் சென்றனர்.
ஆய்வு
பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலத்தின் நுழைவுப் பகுதியில் வைத்து வடிவமைக்கப்பட்டு மையப்பகுதியில் பொருத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தையும் ஆய்வு செய்தார்.
ெரயில்வேயின் கட்டுமான நிறுவனமான ஆர்.வி.என்.எல் அதிகாரிகள் தூக்குப்பாலத்தின் நீளம், உயரம், எடை, அதன் செயல்பாடுகள் குறித்த விவரங்களை ரெயில்வே வாரிய தலைவரிடம் விளக்கி கூறினார்கள். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு ரெயில்வே வாரிய தலைவர், தனுஷ்கோடி சென்றார்.
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அமித்குமார் மனுவால், ரெயில்வே கட்டுமான பிரிவு முதன்மை தலைமை இயக்க மேலாளர் குமார், முதன்மை தலைமை பொறியாளர் தேஷ் ரத்தன் குப்தா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.