தமிழ்நாட்டில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும் (வட்டார ஊராட்சிகள்) மற்றும் 36 மாவட்ட ஊராட்சிகளும் உள்ளன.இதில் வீட்டுவரி/சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், தொழில்களுக்கான உரிமம் பிற வரியல்லாத வருவாய் இனங்கள் ஆகியன வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.
இதன் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக https://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.
ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த இணையதளத்தில் நீங்கள் சொத்து வரி கணக்கீடு, வரி நிலுவைத் தொகையை பார்க்க, விரைவாக வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்கும் வசதி உள்ளது
ஆன்லைன் மூலம் வரி கட்டடுவது எப்படி:-
https://vptax.tnrd.tn.gov.in/ தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதில் வரி செலுத்த என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் pay tax என்பதை கிளிக் செய்து உள் நுழையுங்கள்.
அடுத்ததாக உள்ள படிவத்தில் உங்கள் பெயர் உங்கள் மொபைல் எண், உங்கள் இ மெயில் முகவரி, பதிவிட்டு அடுத்து உங்கள் மாவட்டத்தை செலக்ட் செய்து, உங்கள் தாலுக்கா செலக்ட் செய்து கொள்ளுங்கள் அடுத்தாக உங்கள் ஊராட்சியை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து முக்கியமாக சொத்து வரி, குடிநீர் வரி ,இதர வரி என உள்ளதில் நீங்கள் செலுத்த வேண்டிய உங்கள் வரியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து மிக முக்கியமாக உங்கள் வரி விதிப்பு எண்ணை பதிவிடுங்கள்.
உங்கள் வரி விதிப்பு எண் மிகவும் முக்கியம் வரி விதிப்பு எண் தெரியவில்லை என்றால் நீங்கள் ஏற்கனவே கட்டிய வரி விதிப்பு ரசிதீல் இருக்கும் அல்லது உங்கள் ஊராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் வரி விதிப்பு எண்ணை கேட்டு பெறுங்கள்.
அடுத்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் அவ்வளவு தான்.
அடுத்து உங்கள் விவரங்கள் உங்கள் வீடு வகை மற்றும் நிலுவைதொகை எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களும் வரும்,
அதில் உங்கள் வரிவிதிப்பில் உள்ள நிலுவை தொகையை ஆன்லைனில் செலுத்துங்கள் அதன் பின்பு வரி ரசிது உங்கள் இ மெயிலுக்கு வரும் அவ்வளவுதான்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.