மணமேல்குடியில் விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீது மோதியதில் கடலில் விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் மீட்கப்பட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரிவலை பயன்படுத்தி மீன்பிடித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராம பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இதில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தினசரி கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் பகுதியில் அரிவலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை சரக சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளுடன் கடலுக்கு சென்றனர். அப்போது கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் தங்களது விசைப்படகில் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
கடலில் விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்
இதைப்பார்த்த மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தினர். அப்போது விசைப்படகை கொண்டு மீன்வளத்துறை அதிகாரிகள் வந்த நாட்டுப்படகு மீது பயங்கரமாக மோதி உள்ளனர். இதில் படகில் இருந்த மீன்வளத்துறை சரக சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் கடலில் விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனடியாக மற்றொரு படகில் வந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்த சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் விசைப்படகை கொண்டு மோதியதில் நாட்டுப்படகும் சேதமடைந்தது.
சாலை மறியல்
இதையடுத்து நாட்டுப்படகை சேதப்படுத்திய விசைப்படகு மீனவர்களை கண்டித்தும், அரிவலை, இரட்டைமடி வலை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், விசைப்படகு மீனவர்களால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போவதாக கூறி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிவாரணம் பெற்று தரப்படும்
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது விசைப்படகை வைத்து நாட்டுப்படகை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சேதமடைந்த நாட்டுப்படகுக்கு அரசு மூலம் நிவாரணம் பெற்று தரப்படும் என்று கூறினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாட்டுப்படகை சேதப்படுத்திய 4 மீனவர்கள் கைது
நாட்டுப்படகு மீது விசைப்படகு மீனவர்கள் மோதியதில் நாட்டுப்படகு சேதமடைந்தது. இதில் மீன்வளத்துறை சரக சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் கடலில் விழுந்தார். இதையடுத்து அவரை சக மீனவர்கள் மீட்டனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கொடிக்குளம் பகுதியை சேர்ந்த தாஸ் மகன் சிவகுமார் (வயது 28 ), கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகரை சேர்ந்த மரியசெல்வம் மகன் சூர்ய பிரகாஷ் (25), ராம்நகரை சேர்ந்த அம்மாசி மகன் கருப்பசாமி (24), சதாம் நகரை சேர்ந்த வேலாயுதம் மகன் சூர்யா (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.