புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் உள்ள அரசு பெண்–கள் உயர்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மாணவிகள் மரத்தடி நிழலிலும், தரையில் அமர்ந்தும் கல்வி பயின்று வந்தனர்.
எனவே இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என பல்வேறு தரப்பி–னர் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் பள்ளிக்கு ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்ட அப்துல்லா எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து, அரசு பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக முதல் மதிப்–பெண் எடுத்த மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாயை அப்துல்லா எம்.பி. வழங்கினார்.
மேலும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். இந்த விழாவில் அப்துல்லா எம்.பி., தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி, தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.