கோபாலப்பட்டிணம் செய்யது முகம்மது ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழாவை முன்னிட்டு தேங்காய் சோறு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் சின்ன பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் செய்யது முகம்மது ஒலியுல்லா தர்ஹா அமைந்துள்ளது.
இந்த தர்காவில் வருடம் வருடம் ஷாபான் பிறை 5-ஆம் நாள் கொடி ஏற்றப்பட்டு பத்து நாட்களுக்கு தினமும் மவுலது ஓதப்பட்டு நேர்ச்சை வழங்கப்படும்.
பிறகு வருடம் வருடம் ஷாபான் பிறை 15-ஆம் நாள் அன்று ஊர் பொதுமக்களுக்கு உணவு (தேங்காய் சோறு) வழங்கப்படும். அதனடிப்படையில் 26-02-2024 திங்கட்கிழமை ஊர் மக்களுக்கு தேங்காய் சோறு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று வாங்கி சென்றனர்.
ஒரு டோக்கனின் விலை ரூ.100 என நிர்ணைக்கப்பட்டு ஜமாஅத் நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்பட்டு தேங்காய் சோறு வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.