ஏம்பக்கோட்டை ரஹுமா பரக்கத் மதரஸாவில் நடைபெற்ற முதலாம் ஆண்டு முபல்லிகா & ஹாபிழா சகீரா இரண்டாம் ஆண்டு காரிஆ மூன்றாம் ஆண்டு முஅல்லமா பட்டமளிப்பு விழா நான்காம் ஆண்டு ஆண்டு விழா




புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல்  அருகில் உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக்கல்லூரியில்  கடந்த  24, ந்தேதி சனிக்கிழமை நான்காம் ஆண்டு விழாவும்  25 ம் தேதி ஞாயிறு அன்று பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது

பட்டமளிப்பு விழா ஞாயிறு அன்று 10. மணிக்கு துவங்கியது ஏம்பக்கோட்டை ஜமாஅத் தலைவர் தலைமையில்  ஏம்பக்கோட்டை மஸ்ஜிதே இலாஹி வீடியோ இமாம் மௌலவி ஜகுபர் சாதிக் குதூஸி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்...

கல்லூரியின் முதல்வர் மௌலவி ,பாஜில் ,காரி ,அல்ஹாஜ் J. முகமது மைதீன் தாவூதி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும்
வரவேற்புரையும் நிகழ்த்தினார்...

பள்ளியின் இமாம் மௌலவி ரபீக் ரியாஜி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்த 
பல்வேறு வட்டார உலமாக்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியாக மதுரை இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மதரஸா முதல்வர் 
மௌலவி S.முஹம்மது ஷகீல் தாவூதி அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தி பட்டம் பெறும் மாணவிகளுக்கு ஸனதுகள் வழங்கினார்கள்...

இறுதியாக  கல்லூரி முதல்வர் மௌலவி J முகமது மைதீன் தாவூதி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி  புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி.கா மீரான் கனி இம்தாதி அவர்கள் துஆ செய்து நிறைவு செய்தார்கள் இந்நிகழ்வில் 700 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டார்கள்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments